Home
Overview
Technical Help

Select Unit > Unit 5 > Reading 2: சிங்கமும் நரியும்Reading in Spoken form  Reading 1  Exercise 3  Exercise 4

சிங்கமும் நரியும்

ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. சிங்கம் காட்டில் இருப்பது எல்லா மிருகங்களுக்கும் தெரியும். சிங்கம் மற்ற மிருகங்களையெல்லாம் அடித்து சாப்பிட்டுவந்தது. சிங்கம் இப்படி தங்களை சாப்பிடுவது மிருகங்களுக்குப் பிடிக்கவில்லை. இதை நிறுத்த வேண்டும் என்று அவை நினைத்தன. ஒரு நரி ஒரு திட்டம் போட்டது. சிங்கத்திடம் போய், “நீங்கள் எங்களோடு சண்டை போடவேண்டாம். நீங்கள் எங்களில் ஒருவரை ஒரு நாளைக்கு சாப்பிடுங்கள். உங்களுடைய சாப்பாட்டுக்கு நாங்கள் ஒவ்வொருவராக வர ஏற்பாடு செய்கிறோம்” என்று சொன்னது. சிங்கம் அதற்கு சரி என்று சொன்னது. நரி இதை எல்லா மிருகங்களிடமும் சொன்னது. ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் சிங்கத்திடம் வந்தது. ஒரு நாள் நரியின் முறை வந்தது. நரி சிங்கத்திடம் போய், “உங்களைப் போலவே இன்னொரு சிங்கம் இந்த காட்டில் இருக்கிறது. அதை நான் வழியில் பார்த்தேன் என்று சொன்னது.“ சிங்கத்துக்கு கோபம் வந்தது.

நான் தான் இந்த காட்டுக்கு ராஜா! இன்னொரு சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? எங்கே! காட்டு என்று சொன்னது. நரி சிங்கத்தை ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் அழைத்துக்கொண்டு வந்தது. கிணற்றில் எட்டிப் பார் என்று சொன்னது. சிங்கம் கிணற்றுக்குள் பார்த்தது. அங்கே தன்னுடைய நிழலை பார்த்தது. அது இன்னொரு சிங்கம் என்று நினைத்து அதைக் கொல்ல நினைத்து கிணற்றில் குதித்து இறந்து போனது. காட்டில் எல்லா மிருகங்களும் மகிழ்ச்சியாக இருந்தன.

© South Asia Language Resource Center (SALRC)