Home
Overview
Technical Help

Select Unit > Unit 4 > Reading 2: வாசல்படிReading in Written form  Reading 1  Exercise 3  Exercise 4

வீட்டுக்கு வீடு வாசல்படி

தன்னோடெ மகன் சரியாப் படிப்பதில்லெ, மனெவி சரியாச் சமைப்பதில்லெ, மகள் வீட்டெச் சுத்தம் செய்வதில்லெண்ணு சுந்தரம் நாளுக்கு நாள் கவலெப் பட்டுக்கிட்டே இருப்பான். அடுத்த வீட்டு மணியும் அவனோடெ மனெவியும் அவங்களோடெ குழந்தெயோடு மகிழ்ச்சியா இருக்காங்கண்ணு சுந்தரம் எப்பவும் நெனெச்சிக்கிட்டிருப்பான். ஒரு நாள் சுந்தரம் மணியெக் கடெத்தெருவிலெ எதேச்சையாப் பாத்தான். அவனோடு பேசிக்கிட்டிருந்தப்போ, அவனோடெ மனெவி மணிக்கு “ஒரு தரம் சாப்பிடுறீங்களா? காப்பி குடிக்கிறீங்களா? தண்ணீர் வேணுமாண்ணு எதாவது கேட்டுக்கிட்டேயிருப்பாள். அவள் தன்னோடெ குழந்தெயெ ரொம்ப அன்பா பாத்துக்குவாள்ண்ணு பெருமையடிச்சிக்கிட்டான். அதெக் கேட்ட சுந்தரத்துக்கு ஒரே கவலெ. தன்னோடெ மனெவி அப்படி இல்லெயேண்ணு வருத்தப்பட்டான்.

மணி தன்னோடெ மனெவியெப் பத்தி அடிக்கொருதரம் புகழ்ந்து பேசுறான். ஆனா சுந்தரம் பேச்சுக்குப் பேச்சு தன்னோடெ மனெவியெ பத்தீ குறை சொல்லிக்கிட்டேயிருக்கான்.

சில நாட்கள் கழிச்சு மணியோடெ மனெவி சுந்தரத்தோடெ மனெவியோட பேசிக்கிட்டிருந்தா. அவுங்க அவ்வப்போ இப்படி ஏதாவது பேசிக்கிட்டிருக்றது வழக்கம். மணியோட மனைவி போனதுக்கு அப்புறம் என்ன பேசிக்கிட்டிருந்தீங்கண்ணு தன்னோடெ மனைவிக்கிட்டெ கேட்டான் சுந்தரம். மணி எப்பவும் தன்னையும் தன் மகன்களெயும் திட்டிக்கிட்டே இருக்றதாகவும், பலகாரம் செய்யச் சொல்லிக்கிட்டேயிருக்றதாகவும் மணியோட மனைவி சொன்னாண்ணு சுந்தரத்தோடெ மனைவி சொன்னா.

அப்படின்னா சுந்தரம் சொன்னதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தானா? யாரு வீட்டில்தான் கொறெ இல்லெ?

வீட்டுக்கு வீடு வாசல்படி!

© South Asia Language Resource Center (SALRC)