Home
Overview
Technical Help

Select Unit > Unit 4 > Reading 1: வாத்தியார்Reading in Spoken form  Reading 2  Exercise 5  Exercise 6

வால் மட்டும் நுழையவில்லை

ஒரு கிராமத்தில் ஒரு வாத்தியார் இருந்தார். அந்தக் கிராமத்தில் எல்லோரும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டார்கள். பல மாணவர்கள் அவரிடம்

உபதேசம் கேட்க வந்தார்கள். ஒரு நாள் பத்து மாணவர்கள்

அவரிடம் உபதேசம் கேட்க வந்து உட்கார்ந்தார்கள். அந்த வாத்தியார் பல

விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு அறிவுரை

சொன்னார்.

அந்த இடத்தில் ஒரு எலி அங்கும் இங்கும் ஓடினது. பிறகு

அது தன் வளைக்குள் நுழைந்தது. ஒரு மாணவன் வாத்தியாரின்

உபதேசங்களை கேட்கவில்லை ஆனால் எலியை பார்த்தான். அப்போது வாத்தியார் அந்த மாணவனிடம் மாணவனே எல்லாம் உன் மண்டைக்குள் நுழைந்ததா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் குருவே எல்லாம் நுழைந்தது. வால் மாத்திரம் நுழையவில்லை என்று சொன்னான்.

© South Asia Language Resource Center (SALRC)