Home
Overview
Technical Help

Select Unit > Unit 4 > Reading 4: வாத்தியார்Reading in Written form  Reading 2  Exercise 5  Exercise 6

வால் மட்டும் நுழையலெ

ஒரு கிராமத்துலெ ஒரு வாத்தியார் இருந்தார். அந்தக் கிராமத்துலெ எல்லோரும் அவரெ பத்தி கேள்விப்பட்டாங்க. பல மாணவங்க அவரிகிட்ட

உபதேசம் கேக்க வந்தாங்க. ஒரு நாள் பத்து மாணவங்க

அவர்கிட்ட உபதேசம் கேக்க வந்து உக்காந்தாங்க. அந்த வாத்தியார் பல

விஷயத்தெ பத்தி அவங்களுக்கு அறிவுரை

சொன்னார்.

அந்த இடத்துலெ ஒரு எலி அங்கும் இங்கும் ஓடுச்சு. பெறகு

அது தன் வளைக்குள்ளெ நுழெஞ்சிது. ஒரு மாணவன் வாத்தியாரின்

உபதேசத்தெ கேக்கலெ ஆனா எலியெ பார்த்தான். அப்போ வாத்தியார் அந்த மாணவன்கிட்டெ மாணவனே எல்லாம் உன் மண்டைக்குள்ளெ நொழெஞ்சித்ண்ணு கேட்டார். அதுக்கு அந்த மாணவன் குருவே எல்லாம் நுழெஞ்சிது. வால் மாத்திரம் நுழையலெண்ணு சொன்னான்.

© South Asia Language Resource Center (SALRC)